search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ஜீப் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து - பேக்கரி கடை ஊழியர் பலி
    X

    ஜீப் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து - பேக்கரி கடை ஊழியர் பலி

    ஓசூர் அருகே முன்னால் சென்ற ஜீப் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் பேக்கரி கடை ஊழியர் பலியானார்.
    ஓசூர்:

    குருபரபள்ளி விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 33). இவர் பேக்கரி கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் தனது நண்பர் கோபி (35) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பெங்களூரு நோக்கி சென்றார். வண்டியை கோபி ஓட்டி சென்றார்.

    ஓசூர் முதலாவது சிப்காட் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, முன்னால் சென்ற ஜீப் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில், கோபி, லட்சுமணன் ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர். சிப்காட் போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமணன் இறந்தார். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 
    Next Story
    ×