search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாடிக்கொம்பில் சேதமடைந்த அரசு ஆஸ்பத்திரி கட்டிடம்
    X

    தாடிக்கொம்பில் சேதமடைந்த அரசு ஆஸ்பத்திரி கட்டிடம்

    தாடிக்கொம்பில் அரசு ஆஸ்பத்திரி கட்டிடம் சேதமடைந்துள்ளதால் நோயாளிகள் அச்சத்தில் உள்ளனர்.

    தாடிக்கொம்பு:

    திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் உள்நோயாளிகளாகவும் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அடுத்து கிராமமக்கள் தாடிக்கொம்பு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கே வந்து செல்கின்றனர். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் அதிகளவில் வந்து சிகிச்சை பெற்றுசெல்கின்றனர்.

    தற்போது பிரசவ வார்டு உள்ளிட்ட பகுதிகளில் பெயிண்ட் பெயர்ந்து விழுந்துள்ளது. மேலும் மேற்கூரையும் சேதமடைந்து இடியதொடங்கியுள்ளது. கட்டிடம் கட்டி 5 ஆண்டுகள் தான் ஆகிறது. தரமற்ற முறையில் கட்டிடம் கட்டப்பட்டதால் இந்தநிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே இதனை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×