search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாடானையில் சாலையோர பள்ளங்களை மூடக் கோரிக்கை
    X

    திருவாடானையில் சாலையோர பள்ளங்களை மூடக் கோரிக்கை

    திருவாடானையில் குடி நீர் வடிகால் வாரியத்தால் தோண்டிய பள்ளங்களை சரிசெய்ய பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தொண்டி:

    திருவாடானை அருகே பாரதிநகரில் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு சொந்தமான நீரேற்று நிலையம் உள்ளது. இந்த நீரேற்று நிலையத்திற்கு அருகில் பல மாதங்களுக்கு முன்பு குழாய் உடைப்பை சரிசெய்ய பெரிய பள்ளம் தோண்டப்பட்டது.

    உடைப்பு சரிசெய்யப்பட்ட நிலையில் இதுநாள் வரை அந்த ஆபத்தான பள்ளத்தை மூடவில்லை. இந்த பள்ளமானது மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளதால் எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம்.

    அதே போல் திருவாடானை நான்கு முக்கு சந்திப்பு சாலையில் குடிநீர் குழாய் உடைந்து வீணாக பல மாதங்களாக தண்ணீர் ஓடிய நிலையில் கலெக்டர் உத்தரவின் பேரில் உடனடியாக உடைப்பு சரி செய்யப்பட்டது.

    ஆனால் அதற்காக தோண் டிய பள்ளம் இன்னமும் மூடப்படவில்லை. இந்த சாலை மிகவும் போக்கு வரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதியாகும் எனவே குடிநீர்வடிகால் வாரியம் பள்ளங்களை மூட இந்த பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×