search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரூரில் டயர் கடையில் கொள்ளை
    X

    அரூரில் டயர் கடையில் கொள்ளை

    அரூரில் டயர் கடையில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Robbery

    அரூர்:

    தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த எருமியாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்மணி. இவர் அரூரில் உள்ள சேலம் சாலையில் டயர் கடை வைத்துள்ளார்.

    நேற்று இரவு 8 மணிக்கு கடையை அடைத்துவிட்டு சென்றார். இன்று காலை 6 மணிக்கு அவர் கடைக்கு பக்கத்தில் உள்ள ஆட்டோ மொபைல் கடை உரிமையாளர் ஜன என்பவர் இவருக்கு போன் செய்து கடையின் சட்டர் உடைக்கப்பட்டிருப்பதாக தகவல் கூறினார்.

    தமிழ்மணி வந்து பார்த்தபோது கடையில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள 8 டயர்கள் (பஸ்-லாரிகளுக்கு போடக்கூடியது), ரூ.32 ஆயிரம் மதிப்புள்ள 4 பேட்டரிகள், ரொக்க பணம் 7 ஆயிரம் ஆகியவை கொள்ளை போயிருந்தது.

    இதுகுறித்து அவர் அரூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×