search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பத்தூர் நகராட்சியில் மேல்நிலை குடிநீர் தொட்டி- நல்லதம்பி எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்
    X

    திருப்பத்தூர் நகராட்சியில் மேல்நிலை குடிநீர் தொட்டி- நல்லதம்பி எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்

    திருப்பத்தூர் நகராட்சியில் ரூ.50 லட்சத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட பூமி பூஜையை நல்லதம்பி எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் நகராட்சி 32 வார்டு ஆரிப் நகரில் குடிநீர் பிரச்சனை உள்ளது என அப்பகுதி மக்கள் நல்லதம்பி எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்தனர்.

    இதனைத்தொடர்ந்து நல்லதம்பி எம்.எல்.ஏ., குடிநீர் வடிகால் வாரிய செயலாளர் பிரகாசை சந்தித்து மனு அளித்தார்.

    அதனைத் தொடர்ந்து ஆரிப் நகரில் ரூபாய் 50 லட்சம் செலவில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டவும் 1 லட்சம் லிட்டர் தண்ணீர் கீழே தேக்கிவைக்க நீர்த்தேக்கத் தொட்டியும் கட்ட தமிழக அரசு உத்தரவிட்டது.

    மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்ட அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி ஆரிப் நகரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகராட்சி பொறியாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். பணி மேலாளர் அன்பரசு இளநிலை பொறியாளர் அறிவழகன் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக நல்லதம்பி எம்.எல்.ஏ., கலந்து கொண்டு மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்ட பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டி பேசினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் நகர சபை தலைவர் எஸ்.அரசு முன்னாள் கவுன்சிலர்கள் சவுத்அகமத் ஸ்ரீதர் கமால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இறுதியில் ஒப்பந்ததாரர் சேகர் நன்றி கூறினார் நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இப்பகுதியில் நீண்டநாள் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்ட கோரிய கோரிக்கை நிறைவேறியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    Next Story
    ×