search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமங்கலம் அருகே அ.தி.மு.க. செயலாளருக்கு கொலை மிரட்டல் - தினகரன் அணி நிர்வாகிகள் மீது வழக்கு
    X

    திருமங்கலம் அருகே அ.தி.மு.க. செயலாளருக்கு கொலை மிரட்டல் - தினகரன் அணி நிர்வாகிகள் மீது வழக்கு

    திருமங்கலம் அருகே அ.தி.மு.க. செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த தினகரன் அணி நிர்வாகிகள் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    பேரையூர்:

    திருமங்கலம் அருகேயுள்ள பெரிய உலகாணியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் கள்ளிக்குடி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக உள்ளார்.

    சமீபத்தில் நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார்.

    இந்த நிலையில் மகாலிங்கம் வடக்கம்பட்டி கூட்டுறவு வேளாண்மை வங்கி அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது டி.டி.வி. தினகரன் அணியைச் சேர்ந்த அகஸ்தாபட்டியைச் சேர்ந்த ராஜா, எஸ்.பி. நத்தத்தைச் சேர்ந்த சின்ன இருளப்பன், கோபாலபுரத்தைச் சேர்ந்த மனோகரன் ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் மகாலிங்கத்தை வழிமறித்து அவதூறான வார்த்தைகளால் பேசியதோடு ஆயுதங்களை காட்டி கொலை மிரட்டலும் விடுத்தனர்.

    இது குறித்து மகாலிங்கம் கள்ளிக்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×