என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பழனி அருகே ஒர்க்ஷாப்பில் தீ பிடித்து 20 பைக்குகள் சேதம்
பழனி:
பழனி - கோவை ரோடு காமராஜ் நகர் அருகில் பாலாஜி மில் பகுதியில் சரவணன் என்பவருக்கு சொந்தமான ஒர்க்ஷாப் உள்ளது. நேற்று இரவு சரவணன் மற்றும் ஊழியர்கள் பணியை முடித்து விட்டு சென்று விட்டனர்.
நள்ளிரவில் கடையில் திடீரென தீ பிடித்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. உடனே அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர்.
முடியாமல் போகவே பழனி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருந்த போதும் ஒர்க்ஷாப்பில் பழுது நீக்கத்திற்காக வைக்கப்பட்டு இருந்த 20 மோட்டார் சைக்கிள்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.
ஒர்க்ஷாப் அருகே அதிக அளவு கடைகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளது. தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து நடந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது.
இது குறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் பழனி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்