search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூர் தூயமேரி பள்ளி ஆண்டு விழா- அரசு கொறடா பங்கேற்பு
    X

    அரியலூர் தூயமேரி பள்ளி ஆண்டு விழா- அரசு கொறடா பங்கேற்பு

    அரியலூர் தூயமேரி உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழா அரசு கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
    தாமரைக்குளம்:

    அரியலூர் தூயமேரி உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழா தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட கல்வி அலுவலர் செல்லம், பள்ளி துணை ஆய்வாளர் பழனிச்சாமி, பள்ளி தாளாளர் அந்தோணி சாலமன், தலைமை யாசிரியர் அந்தோணி,அரசு வக்கீல் சாந்தி, கூட்டுறவு சங்க நிர்வாகிகள் ஜீவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    அரசு தலைமை கொறடா தாமரை.எஸ்.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. பேசும் போது, சொந்த ஊரில் இருந்து 7கி.மீ நடந்து வந்து அரசு பள்ளியில் தான் படித்தோம். அப்போது இருந்த காலகட்டங்கள் வேறு, நான் சாதாரண விவசாய குடும்பத்தை சார்ந்தவன், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா கல்வி துறைக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து அதிக நிதி உதவிகளை செய்தார். மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி, மடிகணினி, பாட புத்தகங்கள், சீருடைகள் உட்பட பல பொருட்கள் வழங்கப்பட்டது.

    தற்போது மிகச்சிறப்பாக தமிழகத்தில் ஆட்சி செய்யப்பட்டு வருகின்றது. கல்வி துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு கல்விதுறை மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. மாணவர்கள் எந்த அளவுக்கு படிக்க நினைக்கின்றார்களோ? அந்த அளவுக்கு அரசு முழு உதவியும் செய்து வருகின்றது. கல்வி பயின்றால்தான் வாழ்க்கையின் தரம் உயரும், படிப்பு மட்டும் முக்கியமல்ல. உடற்பயிற்சி, விளையாட்டு, யோகா போன்றவைகளிலும் ஆர்வம் இருக்க வேண்டும் என்றார். 

    நிகழ்ச்சியில் தொழிலதிபர் டில்லிராஜ், நகர கூட்டுறவு வங்கி தலைவர் சங்கர், துணைதலைவர் பழனியாண்டி, வீடு கட்டும் சங்க தலைவர் கணேசன், கூட்டுறவு பால் சொசைட்டி சங்க துணைதலைவர் பாஸ்கர், ஆசிரியர், ஆசிரியைகள், மாணவமாணவிகள், பெற் றோர்கள் கலந்துகொண்டனர். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
    Next Story
    ×