search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அண்ணாநகரில் கல்லூரி மாணவியை தாக்கி செல்போன் பறிப்பு
    X

    அண்ணாநகரில் கல்லூரி மாணவியை தாக்கி செல்போன் பறிப்பு

    அண்ணாநகரில் கல்லூரி மாணவியை தாக்கி செல்போன் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    பாடி ஆபீசர்ஸ் காலனி பிங்க் அவென்யூவைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகள் திவ்யா. எழும்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவர் நேற்று மாலை அண்ணா நகரில் உள்ள நடன பயிற்சி பள்ளிக்கு செல்வதற்காக அண்ணா நகர் மேற்கு 1-வது தெருவில் சாலையில் நடந்து வந்தார்.

    அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் திவ்யாவை தாக்கி அவரிடம் இருந்த ரூ. 84 ஆயிரம் மதிப்புள்ள ஐபோனை பறித்து தப்பினர். ஆட்கள் நடமாட்டம் மிகுந்த அண்ணாநகரில் பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து அமைந்தகரை போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கிருந்த கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர்.

    நேற்று முன்தினம் இரவு அமைந்தகரை மேத்தா நகரில் அழகு நிலையம் நடத்தி வரும் பெண்ணின் பைக் மீது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் மோதி அவரை கீழே தள்ளி அவரிடம் இருந்த ரூ. 14 ஆயிரம் பணம் 6 1/2 சவரன் நகை 2ஐபோன் ஆகியவற்றை பறித்து சென்றது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×