என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
Byமாலை மலர்26 Aug 2018 11:51 PM GMT (Updated: 26 Aug 2018 11:51 PM GMT)
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் பலத்த மழை வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
சென்னை :
வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. அதன் காரணமாகவும், வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்தார்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை சில இடங்களில் பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:-
வட மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. அது அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு தான் அது எந்த திசையில் நகர்கிறது என்று தெரியும்.
இதன் காரணமாகவும், தமிழகத்தின் தென்மேற்கு பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதன் காரணமாகவும், தமிழகத்தில் திங்கட்கிழமை (இன்று) ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும். சில இடங்களில் லேசான மழை பெய்யும். சென்னையிலும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் லேசான தூறல் மழை பெய்யும்.
இவ்வாறு வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்தார்.
வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. அதன் காரணமாகவும், வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்தார்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை சில இடங்களில் பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:-
வட மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. அது அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு தான் அது எந்த திசையில் நகர்கிறது என்று தெரியும்.
இதன் காரணமாகவும், தமிழகத்தின் தென்மேற்கு பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதன் காரணமாகவும், தமிழகத்தில் திங்கட்கிழமை (இன்று) ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும். சில இடங்களில் லேசான மழை பெய்யும். சென்னையிலும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் லேசான தூறல் மழை பெய்யும்.
இவ்வாறு வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X