search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நல்லம்பள்ளியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
    X

    நல்லம்பள்ளியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

    நல்லம்பள்ளியில் 100 க்கும் மேற்பட்ட கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.
    நல்லம்பள்ளி:

    தருமபுரி கலெக்டர் மலர்விழி உத்தரவின் பேரில் நல்லம்பள்ளி வட்டாட்சியர் பழனியம்மாள், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள் மொழிதேவன் தலைமையில் குழு அமைத்து நேற்று நல்லம்பள்ளி பகுதியில் வணிக வளாகம், பேக்கரி, பெட்டி கடைகள், ஓட்டல், பூக்கடை, காய்கறி கடைகள், என 100 க்கும் மேற்பட்ட கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். 

    மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்று சேம்பல் பைகளை காட்டி அறிவுறுத்தினர். 

    இந்த திடீர் ஆய்வுப்பணியின் போது துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்மணி, வருவாய் ஆய்வாளர் முல்லைக்கொடி, ஊராட்சி செயலர் செல்வம், உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் ஊராட்சி அலுவலக பணியாளர்கள் உடன் இருந்தனர்.
    Next Story
    ×