search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புழல் ஜெயிலில் பெண் கைதி தற்கொலை முயற்சி
    X

    புழல் ஜெயிலில் பெண் கைதி தற்கொலை முயற்சி

    புழல் ஜெயிலில் பெண் கைதி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்குன்றம்:

    சென்னை மைலாப்பூரை சேர்ந்தவர் மைதிலி (38). 2017-ம் ஆண்டு நடந்த வரதட்சணை கொடுமை சாவு தொடர்பாக மைதிலி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் இவர் கைது செய்யப்பட்டார்.

    இதையடுத்து புழலில் உள்ள பெண்களுக்கான சிறையில் மைதிலி அடைக்கப்பட்டார். அங்குள்ள மற்ற பெண் கைதிகளுடன் இருந்து வந்தார்.

    இந்தநிலையில் மைதிலி ஜெயிலில் உள்ள அரளி விதையை அரைத்து தின்றார். இதனால் மயங்கி விழுந்த அவரை ஜெயில் சூப்பிரண்டு அல்லிராணி ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்க நடவடிக்கை எடுத்தார்.

    இந்த தற்கொலை முயற்ச்சிக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×