search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவொற்றியூரில் கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் படுகொலை
    X

    திருவொற்றியூரில் கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் படுகொலை

    திருவொற்றியூரில் கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவொற்றியூர்:

    புதுவண்ணாரப்பேட்டை சிவன் நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் என்கிற வெங்கடேசன். அதே பகுதியில் துணி கடை நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று திருவொற்றியூர் பேசின்ரோட்டில் உள்ள ஒரு கம்பெனி அருகே ஸ்ரீதர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவொற்றியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஸ்ரீதருடன் கடைசியாக செல்போனில் பேசியது யார் என்று விசாரணை நடத்தினர். இதில் புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த புகழேந்தி, தினேஷ் பேசி இருப்பது தெரிந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் ஸ்ரீதருக்கும், புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த மணவாளன் என்பவருக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்தது தெரிந்தது.

    மணவாளன் முன்னாள் ஊர் காவல் படை வீரர் ஆவார். வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு ஊர் திரும்பி இருந்தார். அவரது மனைவி கீர்த்திக்கும் ஸ்ரீதருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. கீர்த்தியின் பெயரை ஸ்ரீதர் இடது கையில் பச்சை குத்தி இருந்தார்.

    இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஆகி உள்ளது. இதுபற்றி போலீசிலும் புகார் செய்யப்பட்டு ஸ்ரீதர் கைதாகி இருந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதர் தனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு மணவாளன்தான் காரணம் என்று புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்து இருப்பதாக தெரிகிறது.

    எனவே கள்ளக்காதல் விவகாரத்தில் அவரை மணவாளன் கூலிப்படையை ஏவி கொன்றாரா? அல்லது வேறு காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


    Next Story
    ×