search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாளை சுதந்திரதின விழா- விழுப்புரம் மாவட்டத்தில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணி
    X

    நாளை சுதந்திரதின விழா- விழுப்புரம் மாவட்டத்தில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணி

    நாடு முழுவதும் நாளை சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    விழுப்புரம்:

    நாடு முழுவதும் நாளை சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது.

    விழுப்புரம் மாவட்டத்தில் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள போலீஸ் பயிற்சி மைதானத்தில் கலெக்டர் சுப்பிரமணியன் தேசியக்கொடி ஏற்றி வைத்து காவல்துறை, தீயணைப்பு, என்.சி.சி. சாரணர் ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்க உள்ளார்.

    இதனைதொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்க உள்ளார். பின்னர் பல்வேறு துறைகள் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

    விழுப்புரம் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பஸ், ரெயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ரெயில் நிலையங்களில் பயணிகள் பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் போலீசார் விழுப்புரம் அருகே உள்ள கோலியனூர் கூட்டுரோட்டில் வாகன சோதனை நடத்தினர். அந்த வழியாக வந்த வாகனங்களை மறித்து சோதனை மேற்கொண்டனர்.

    மேலும் தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களிலும் போலீசார் சோதனை நடத்தினர். பல்லவன், வைகை எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ரெயில்வே இருப்புபாதை மற்றும் பாதுகாப்பு படை போலீசார் மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட கருவிகளை கொண்டு பயணிகள் உடமைகளை சோதனை செய்தனர்.

    அதேபோல் பஸ் நிலையங்களிலும் போலீசார் பயணிகளின் உடமைகளை சோதனையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். மாவட்ட எல்லைப்பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் லாட்ஜிகளிலும் சோதனை நடத்தும் போலீசார் சந்தேகப்படும்படி யாரேனும் தெரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சுதந்திர தினவிழாவையொட்டி விழுப்புரம் மாவட்டம் போலீஸ் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் அந்தந்த போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளிலும் விழிப்போடு இருக்கவும், வாகன சோதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    Next Story
    ×