என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தண்டராம்பட்டு அருகே 10-ம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை
Byமாலை மலர்13 Aug 2018 10:23 AM GMT (Updated: 13 Aug 2018 10:23 AM GMT)
தண்டராம்பட்டு அருகே செல்போனில் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தண்டராம்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு மஞ்சம் பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் திலகவதி (வயது 15). நல்லவன்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வீட்டில் இருந்து வெளியேறிய திலகவதி திடீரென மாயமானார்.
எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது தெரியாமல் இருந்தது. பெற்றோர் பல இடங்களில் தேடினர். எங்கு தேடியும் திலகவதியை கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. இந்நிலையில் இன்று காலை அதே பகுதியில் உள்ள சங்கர் என்பவருடைய விவசாய கிணற்றில் துர்நாற்றம் வீசியது. அப்பகுதிமக்கள் கிணற்றில் பார்த்தனர்.
அப்போது, மாயமான மாணவி திலகவதி அங்கு பிணமாக மிதந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தண்டராம்பட்டு போலீசார், மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மாணவி திலகவதி யாரிடமோ செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்தனர். இதில் மனமுடைந்த மாணவி திலகவதி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு மஞ்சம் பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் திலகவதி (வயது 15). நல்லவன்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வீட்டில் இருந்து வெளியேறிய திலகவதி திடீரென மாயமானார்.
எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது தெரியாமல் இருந்தது. பெற்றோர் பல இடங்களில் தேடினர். எங்கு தேடியும் திலகவதியை கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. இந்நிலையில் இன்று காலை அதே பகுதியில் உள்ள சங்கர் என்பவருடைய விவசாய கிணற்றில் துர்நாற்றம் வீசியது. அப்பகுதிமக்கள் கிணற்றில் பார்த்தனர்.
அப்போது, மாயமான மாணவி திலகவதி அங்கு பிணமாக மிதந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தண்டராம்பட்டு போலீசார், மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மாணவி திலகவதி யாரிடமோ செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்தனர். இதில் மனமுடைந்த மாணவி திலகவதி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X