search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி அருகே சொத்து தகராறில் மூதாட்டியை தாக்கிய கும்பல்
    X

    தேனி அருகே சொத்து தகராறில் மூதாட்டியை தாக்கிய கும்பல்

    தேனி அருகே சொத்து தகராறில் மூதாட்டியை தாக்கிய கும்பலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள ஒத்தப்பட்டி மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்தாய் (வயது 65). இவரது மகன் ராமு (33), மகள் அன்னலெட்சுமி (40). இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

    சின்னத்தாய் பெயரில் உள்ள சொத்துக்களை தங்களுக்கு எழுதி தர வேண்டும் என அவரது மகனும், மகளும் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர். ஆனால் சின்னத்தாய் தனக்கு பிறகுதான் சொத்துக்களை அனுபவிக்க முடியும் என கூறி வந்துள்ளார்.

    சம்பவத்தன்று ராமு, அவரது மனைவி சுகன்யா, அன்னலெட்சுமி, அவரது கணவர் மகாதேவன் ஆகிய 4 பேரும் வந்து சொத்து கேட்டு தகராறு செய்தனர். மேலும் சின்னத்தாயை தாக்க முயன்றனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பாண்டீஸ்வரன் (28) என்பவர் விலக்கி விட வந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் பாண்டீஸ்வரனை இரும்பு கம்பியால் தாக்கினர்.

    மேலும் சின்னத்தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்று விட்டனர். படுகாயமடைந்த பாண்டீஸ்வரன் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சின்னத்தாய் கொடுத்த புகாரின் பேரில் ராயப்பன்பட்டி போலீசார் மகாதேவனை கைது செய்து மற்றவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×