search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க. தலைவர் கருணாநிதி அஞ்சலி பேனர் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு
    X

    தி.மு.க. தலைவர் கருணாநிதி அஞ்சலி பேனர் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வைக்கப்பட்ட பேனர் கிழிக்கப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஈரோடு:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்தார். தமிழகம் முழுவதும் கருணாநிதியும் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மவுன ஊர்வலமும் இரங்கல் கூட்டமும் நடந்து வருகிறது.

    கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பல்வேறு பகுதிகளில் பிளக்ஸ் பேனர்கள், சுவரொட்டி விளம்பரங்களும் தி.மு.க. சார்பில் வைக்கப்பட்டுள்ளன.

    ஈரோடு மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் கருணாநிதி இறப்புக்கு இரங்கல் தெரிவித்து பிளக்ஸ் பேனர்கள், சுவரொட்டி விளம்பரம் வைக்கப்பட்டுள்ளன.

    ஈரோடு மாணிக்கம்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து 2 பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

    நள்ளிரவில் யாரோ மர்ம ஆசாமிகள் அந்த 2 பிளக்ஸ் பேனர்களையும் கிழித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதியில் ஏராளமான தி. மு.க. நிர்வாகிகள் திரண்டனர்.

    மேலும் இது குறித்து ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் முத்துசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார்.

    இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கருணாநிதி பேனர் கிழிக்கப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×