search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் இரும்பு கம்பியால் தாக்கி வாலிபர் மண்டை உடைப்பு
    X

    சேலத்தில் இரும்பு கம்பியால் தாக்கி வாலிபர் மண்டை உடைப்பு

    சேலத்தில் இரும்பு கம்பியால் தாக்கி வாலிபர் மண்டை உடைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து டி.வி.எஸ். பஸ் நிறுத்தம் வழியில் ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது.

    இந்த பங்க் அருகே நேற்று நள்ளிரவு ஆம்னி பஸ் டிரைவர் பாலு என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது கையில் இரும்பு ராடுடன் 30 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவர் வந்தார்.

    அவர் திடீரென பாலுவின் தலை, கை, கால் உள்பட பல்வேறு பகுதிகளில் தாக்கினார். மேலும் அந்த வழியாக சென்ற காரின் கண்ணாடியையும் உடைத்தார்.

    இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்களையும் அந்த நபர் சரமாரியாக தாக்கினார். ஆனாலும் சுற்றி வளைத்து பிடித்த அவர்கள் அந்த நபரை பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தலையில் பலத்த காயம் அடைந்த பாலு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×