search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகையில் காவிரி ஆற்றில் இறங்கிய தொழிலாளி நீரில் மூழ்கி பலி
    X

    நாகையில் காவிரி ஆற்றில் இறங்கிய தொழிலாளி நீரில் மூழ்கி பலி

    நாகை கூலித்தொழிலாழி ஒருவர் போதை ஏறாததால் மறுகரையில் இருந்த டாஸ்மாக் கடைக்கு செல்ல காவிரி ஆற்றை கடந்தபோது நீரில் மூழ்கி பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்து சித்தர்காடு என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஓடும் காவிரி ஆற்றின் இருகரைகளிலும் தலா ஒரு டாஸ்மாக் கடை உள்ளது.

    தற்போது கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் இருகரைகளையும் தொட்டப்படி தண்ணீர் செல்கிறது.

    காவிரி ஆற்றில் உள்ள மற்றொரு டாஸ்மாக் கடைக்கு செல்ல வேண்டும் என்றால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டும்

    இந்த நிலையில் மறையூர் அக்ரஹார தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி பழனிசாமி (வயது 52) என்பவர் நேற்றுமாலை சித்தர்காடு காவிரி ஆற்றின் தென்கரையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். அங்கு அவர் மதுகுடித்தார். ஆனால் அவருக்கு போதை ஏறாததால் ஆத்திரம் அடைந்தார். இதனால் டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் தகராறு செய்தார்.

    பின்னர் இந்த கடை சரக்கு சரியில்லை. நான் அக்கரையில் உள்ள கடைக்கு மது குடிக்க போகிறேன் என்று கூறினார். இதைகேட்டு மற்றவர்கள் ‘வேண்டாம்.. ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்கிறது,’’ என்று தெரிவித்தனர். ஆனால் அதை அவர் காதில் வாங்கி கொள்ளாமல் காவிரி ஆற்றில் குதித்து நீந்த தொடங்கினார்.

    அப்போது ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் ஆழமான பகுதிக்கு சென்ற அவரால் நீந்த முடியாமல் தத்தளித்தார். பிறகு சில நிமிடங்களில் பழனிசாமி ஆற்று தண்ணீருடன் அடித்து செல்லப்பட்டார்.

    இதைபார்த்து கரையில் நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே மயிலாடுதுறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிலைய வீரர்கள் விரைந்து வந்து ஆற்றில் இறங்கி தேடி பார்த்தனர். ஆனால் அவரது உடல் கிடைக்கவில்லை. இரவு நேரமாகி விட்டதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலையிலும் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் இளைஞர்கள் காவிரி ஆற்றில் பழனிசாமி உடலை தேடி பார்த்து வருகின்றனர்.

    டாஸ்மாக் கடைக்கு சுற்றி செல்லாமல் காவிரி ஆற்றில் இறங்கிய தொழிலாளி நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×