search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு ஈ.வி.என். ரோட்டில் திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி
    X

    ஈரோடு ஈ.வி.என். ரோட்டில் திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி

    ஈரோடு ஈ.வி.என். ரோட்டில் பாதாள சாக்கடை பணிகள் முடிக்கப்பட்ட பகுதியில் திடீர் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த இடம் மிகவும் அபாயகரமாக காட்சி அளிக்கிறது. #Ditch

    ஈரோடு:

    ஈரோடு மாநகர பகுதி களில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி இப்போது உச்சக்கட்டத்தில் நடந்து வருகிறது.

    இதனால் பல இடங்களில் தோண்டப்பட்ட இடங்களில் ரோடுகள் போடப்பட்டும் பல இடங்களில் ரோடுகள் போடப்படாமலும் உள்ளது.

    இந்த நிலையில் ஈரோடு ஈ.வி.என். ரோட்டில் பாதாள சாக்கடை பணிகள் முடிக்கப்பட்ட பகுதியில் திடீர் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த இடம் மிகவும் அபாயகரமாக காட்சி அளிக்கிறது.

    அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் பயந்து செல்ல வேண்டியதுள்ளது. பகல் நேரத்தி லாவது பார்த்து போய் விடலாம். ஆனால் இரவு நேரத்தில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்றால் சரி... அதே சமயம் வெளியூரை சேர்ந்தவர்களாக இருந்தால் தெரியாமல் பள்ளத்தில் விழுந்து விபரீதமாகி விடும்.

    ஆகவே இந்த திடீர் பள்ளத்தை மூடி மக்களின் பயத்தை போக்க வேண்டும். தாமதிக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண் டும் எனவும் கேட்டு கொண்டுள்ளனர்.

    அபாய பள்ளம் உடனடியாக மூடப்படுமா?. #Ditch

    Next Story
    ×