search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குன்னம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி விவசாயி பலி
    X

    குன்னம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி விவசாயி பலி

    குன்னம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் விவசாயி பலியானார்.
    குன்னம்:

    குன்னம் அருகே உள்ள சின்னவெண்மணி சேர்ந்தவர் மருதமுத்து. இவரது மகன் காந்தி (வயது45). விவசாயி. இவர் சம்பவதன்று தனது மோட்டார் சைக்கிளில் சின்ன வெண்மணியில் இருந்து மேலமாத்தூர் சென்று  கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

    இதில் காந்தி படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காந்தி இறந்தார். 

    இது குறித்து குன்னம் போலீசார் வழக்குபதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகிறார்கள். 
    Next Story
    ×