search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடக்கிறது
    X

    கரூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடக்கிறது

    கரூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள் 27-ந்தேதி நடைபெறவுள்ளதாக மாவட்ட கலெக்டர் அன்பழன் தெரிவித்துள்ளார்.
    கரூர்:

    கரூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள் 27-ந்தேதி நடைபெறவுள்ளது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2018ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட் டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நாளை மறுநாள் 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது.

    இதில் கரூர் மாவட்ட விவசாயிகள், விவசாய சங்க உறுப்பினர்கள் அனைவரும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த மனுக்கள் மட்டும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×