என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வைகை அணை பூங்காவில் காதல் ஜோடிகளை துரத்திய போலீசார்
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை. இதன் இருகரைகளிலும் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. வைகை அணைக்கு தேனி மட்டுமல்லாது தமிழகத்தின் பிறபகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
ஆனால் பூங்காக்களில் கள்ளக்காதல் ஜோடிகள் சில்மிஷத்தில் ஈடுபடுவது குடும்பத்துடன் வருபவர்களை முகம்சுழிக்க வைக்கிறது. இதுகுறித்து போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில் ஆண்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் பாலகுரு, சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் 2 குழுக்கள் அமைக்கப்பட்டு வைகை அணை பூங்காவில் இருகரைகளிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதர்களுக்கு இடையே அத்துமீறிய காதல்ஜோடிகளை போலீசார் விரட்டியடித்தனர்.
இதில் பிடிபட்ட 17 வயதுக்கும் குறைந்த சிறுவர்-சிறுமிகளை போலீசார் கவுன்சிலிங் கொடுத்து படிக்கவேண்டும் என அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். மேலும் கள்ளக்காதல் ஜோடிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து அனுப்பினர். இதுகுறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில், போலீசாரின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இருந்தபோதும் வைகைஅணைப்பூங்காவில் நிரந்தரமாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபடவேண்டும். அத்துமீறுபவர்களை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்