என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விழுப்புரம் அருகே வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டர் தீ பிடித்து எரிந்தது
Byமாலை மலர்18 July 2018 10:12 AM GMT (Updated: 18 July 2018 10:12 AM GMT)
விழுப்புரம் அருகே தீ விபத்தில் வைக்கோல் கட்டுகளும், டிராக்டரின் டயர்களும் தீ பிடித்து எரிந்தது.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே உள்ள ஏழுசெம்பொன் நகரை சேர்ந்தவர் கோபால்(வயது 54). விவசாயி. இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். இதற்கு தீவனம் வாங்குவதற்காக காஞ்சிபுரம் சென்றிருந்தார்.
அங்கு வைக்கோல் கட்டுகளை வாங்கிக் கொண்டு ஒரு டிராக்டரில் ஏற்றிக்கொண்டு நேற்று மாலை ஊருக்கு வந்து கொண்டிருந்தார். தனது வயல் அருகே டிராக்டரை ஓட்டிசென்றபோது மேலே தாழ்வாக சென்ற மின்சார வயர் வைக்கோல் மீது ஒரசி தீ பிடித்தது. அப்போது காற்று வீசியதால் தீ மளமளவென பரவத்தொடங்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் விழுப்புரம் தீயணைப்பு நிலைய அதிகாரி(பொறுப்பு) லட்சுமணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் வைக்கோல் கட்டுகளும், டிராக்டரின் டயர்களும் தீ பிடித்து எரிந்தது. இந்த தீ விபத்தில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வைக்கோல்கள் எரிந்து நாசமானது.
விழுப்புரம் அருகே உள்ள ஏழுசெம்பொன் நகரை சேர்ந்தவர் கோபால்(வயது 54). விவசாயி. இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். இதற்கு தீவனம் வாங்குவதற்காக காஞ்சிபுரம் சென்றிருந்தார்.
அங்கு வைக்கோல் கட்டுகளை வாங்கிக் கொண்டு ஒரு டிராக்டரில் ஏற்றிக்கொண்டு நேற்று மாலை ஊருக்கு வந்து கொண்டிருந்தார். தனது வயல் அருகே டிராக்டரை ஓட்டிசென்றபோது மேலே தாழ்வாக சென்ற மின்சார வயர் வைக்கோல் மீது ஒரசி தீ பிடித்தது. அப்போது காற்று வீசியதால் தீ மளமளவென பரவத்தொடங்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் விழுப்புரம் தீயணைப்பு நிலைய அதிகாரி(பொறுப்பு) லட்சுமணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் வைக்கோல் கட்டுகளும், டிராக்டரின் டயர்களும் தீ பிடித்து எரிந்தது. இந்த தீ விபத்தில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வைக்கோல்கள் எரிந்து நாசமானது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X