என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு - பவானிசாகர் அணையின் நீர் மட்டம் 92 அடியை தொட்டது
Byமாலை மலர்18 July 2018 10:04 AM GMT (Updated: 18 July 2018 10:04 AM GMT)
அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து இன்று காலை 9 மணி நேர நிலவரப்படி 92.11 அடியாக உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருப்பது பவானிசாகர் அணை ஆகும்.
இந்த அணையில் இருந்து திறக்கப்படும் நீரால் கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால் மூலம் சுமார் 2½ லட்சம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளது.
இந்த மாதம் தொடங்கும் போது பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 55 அடியாக இருந்தது. தொடர்ந்து அதிகரித்து வரும் நீர்வரத்து காரணமாக நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து இன்று காலை 9 மணி நேர நிலவரப்படி 92.11 அடியாக உள்ளது.
அணைக்கு வினாடி 10 ஆயிரத்து 719 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை வாய்க்காலுக்கு வினாடிக்கு 850 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
மேலும் குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடியும் திறந்து விடப்படுகிறது.
பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் இன்னும் 10 நாட்களில் முழு கொள்ளவை எட்டிவிடும் என்று பொது பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருப்பது பவானிசாகர் அணை ஆகும்.
இந்த அணையில் இருந்து திறக்கப்படும் நீரால் கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால் மூலம் சுமார் 2½ லட்சம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளது.
இந்த மாதம் தொடங்கும் போது பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 55 அடியாக இருந்தது. தொடர்ந்து அதிகரித்து வரும் நீர்வரத்து காரணமாக நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து இன்று காலை 9 மணி நேர நிலவரப்படி 92.11 அடியாக உள்ளது.
அணைக்கு வினாடி 10 ஆயிரத்து 719 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை வாய்க்காலுக்கு வினாடிக்கு 850 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
மேலும் குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடியும் திறந்து விடப்படுகிறது.
பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் இன்னும் 10 நாட்களில் முழு கொள்ளவை எட்டிவிடும் என்று பொது பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X