search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை அருகே 2 வீடுகளில் புகுந்து நகை-பணம் கொள்ளை
    X

    மதுரை அருகே 2 வீடுகளில் புகுந்து நகை-பணம் கொள்ளை

    மதுரை அருகே 2 வீடுகளில் புகுந்து நகை மற்றும் பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பூதிப்புரத்தைச் சேர்ந்தவர் வெள்ளைஅய்யனார் (வயது 45). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 4 பவுன் நகை, சில்வர் பொருட்களை திருடிக்கொண்டு தப்பினர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் உசிலம்பட்டி தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    அலங்காநல்லூர் போலீஸ் சரகத்துக்குட்பட்ட டி.வாடிப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (44). உடல்நலக்குறைவு காரணமாக இவர் வீட்டை பூட்டிவிட்டு பெருங்குடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இந்த நிலையில் வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் 1½ பவுன் நகை, ரூ. 10 ஆயிரம் ரொக்கத்தை திருடிக்கொண்டு தப்பினர்.

    இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #Tamilnews

    Next Story
    ×