என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லாஸ்பேட்டையில் கார் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்17 July 2018 11:44 AM GMT (Updated: 17 July 2018 11:44 AM GMT)
லாஸ்பேட்டையில் கார் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
லாஸ்பேட்டை சுப்பிரமணிய சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 37). கார் டிரைவர். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், 3 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. தற்போது விஜயலட்சுமி 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இதற்கிடையே பொன் ராஜ் தலையில் நரம்பு கோளாறு காரணமாக வலியால் அவதிப்பட்டு வந்தார். ஆஸ்பத்திரியில் காண்பித்தும் நோய் குணமாகவில்லை. அவ்வப்போது தலைவலியால் பொன்ராஜ் அவதிக்குள்ளாகி வந்தார்.
சம்பவத்தன்றும் அவருக்கு தலைவலி அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பொன்ராஜ் வீட்டில் இருந்த பூச்சு கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டார்.
இதில், மயங்கி விழுந்த பொன்ராஜை அவரது மனைவி விஜயலட்சுமி மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு பொன்ராஜ் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீஸ் ஏட்டு ராமச்சந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
லாஸ்பேட்டை சுப்பிரமணிய சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 37). கார் டிரைவர். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், 3 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. தற்போது விஜயலட்சுமி 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இதற்கிடையே பொன் ராஜ் தலையில் நரம்பு கோளாறு காரணமாக வலியால் அவதிப்பட்டு வந்தார். ஆஸ்பத்திரியில் காண்பித்தும் நோய் குணமாகவில்லை. அவ்வப்போது தலைவலியால் பொன்ராஜ் அவதிக்குள்ளாகி வந்தார்.
சம்பவத்தன்றும் அவருக்கு தலைவலி அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பொன்ராஜ் வீட்டில் இருந்த பூச்சு கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டார்.
இதில், மயங்கி விழுந்த பொன்ராஜை அவரது மனைவி விஜயலட்சுமி மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு பொன்ராஜ் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீஸ் ஏட்டு ராமச்சந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X