search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாஸ்பேட்டையில் கார் டிரைவர் வி‌ஷம் குடித்து தற்கொலை
    X

    லாஸ்பேட்டையில் கார் டிரைவர் வி‌ஷம் குடித்து தற்கொலை

    லாஸ்பேட்டையில் கார் டிரைவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை சுப்பிரமணிய சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 37). கார் டிரைவர். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், 3 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. தற்போது விஜயலட்சுமி 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    இதற்கிடையே பொன் ராஜ் தலையில் நரம்பு கோளாறு காரணமாக வலியால் அவதிப்பட்டு வந்தார். ஆஸ்பத்திரியில் காண்பித்தும் நோய் குணமாகவில்லை. அவ்வப்போது தலைவலியால் பொன்ராஜ் அவதிக்குள்ளாகி வந்தார்.

    சம்பவத்தன்றும் அவருக்கு தலைவலி அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பொன்ராஜ் வீட்டில் இருந்த பூச்சு கொல்லி மருந்தை (வி‌ஷம்) குடித்து விட்டார்.

    இதில், மயங்கி விழுந்த பொன்ராஜை அவரது மனைவி விஜயலட்சுமி மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு பொன்ராஜ் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீஸ் ஏட்டு ராமச்சந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×