search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அருகே உணவு சமைத்த போது ஸ்டவ் வெடித்து இளம்பெண் பலி
    X

    கோவை அருகே உணவு சமைத்த போது ஸ்டவ் வெடித்து இளம்பெண் பலி

    கோவை அருகே உணவு சமைத்துக்கொண்டு இருந்த போது ஸ்டவ் வெடித்த விபத்தில் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
    கோவை:

    கோவை குனியமுத்தூர் அருகே உள்ள இடையர்பாளையம் சர்ச் வீதியை சேர்ந்தவர் மோகன்குமார். கூலித் தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (வயது 30). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று மதியம் வீட்டில் இருந்த லட்சுமி மண்ணெண்ணெய் ஸ்டவில் உணவு சமைத்துக்கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஸ்டவ் வெடித்தது. கண் இமைக்கும் நேரத்தில் தீ லட்சுமியின் சேலையில் பிடித்து உடல் முழுவதும் பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து லட்சுமியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு லட்சுமி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×