search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொத்தவால்சாவடியில் குழந்தை கடத்தல் பீதியில் தொழிலாளி மீது தாக்குதல்
    X

    கொத்தவால்சாவடியில் குழந்தை கடத்தல் பீதியில் தொழிலாளி மீது தாக்குதல்

    கொத்தவால்சாவடியில் குழந்தை கடத்தல் பீதியில் தொழிலாளி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    கொத்தவால்சாவடி ஆறுமுகம் தெருவில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. நேற்று இரவு சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் குடிசை பகுதியில் உள்ள சிறுவர், சிறுமிகளிடம் பேச்சு கொடுத்தார்.

    இதனை பார்த்து சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள், குழந்தை கடத்த வந்திருப்பதாக நினைத்து அவரை சுற்றிவளைத்து சரமாரியாக தாக்கினர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    பின்னர் அவரை கொத்தவால்சாவடி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் அதே பகுதி சின்னதம்பி தெருவை சேர்ந்த சேட்டு என்பதும் குடிபோதையில் அவர் சிறுவர்களிடம் பேசியதும் தெரிந்தது.

    சேட்டுவின் சொந்த ஊர் அரியலூர் ஆகும். அவர் கொத்தவால்சாவடியில் தங்கி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    குழந்தை கடத்தல் பீதியில் தாக்குதல் நடத்தக்கூடாது என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×