search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியகுளத்தில் வீடு புகுந்து பெண்ணின் கழுத்தை அறுத்து சங்கிலி பறிப்பு
    X

    பெரியகுளத்தில் வீடு புகுந்து பெண்ணின் கழுத்தை அறுத்து சங்கிலி பறிப்பு

    பெரியகுளத்தில் வீடுபுகுந்து பெண்ணின் கழுத்தை அறுத்து தாலிச்சங் கிலியை பறித்துச்சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் ஸ்டேட் வங்கி காலனியை சேர்ந்த குமார் மனைவி மணிமாலா(வயது41). வீட்டில் தனியாக சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் வீட்டு கதவை தட்டினார். மணிமாலாவிடம் பேப்பர் வேண்டுமா எனக்கேட்டுள்ளார்.

    வேண்டாம் எனக் கூறியதால் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். இதற்காக உள்ளே சென்ற மணிமாலாவை பின்தொடர்ந்த மர்மநபர் அவரது நகைகளை பறிக்க முயன்றார்.

    அதிர்ச்சி அடைந்த மணிமாலா சங்கிலியை கையால் பிடித்துக்கொண்டு போராடினார். ஆத்திரமடைந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மணிமாலாவின் கழுத்து, முகம், கைகளில் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

    அந்த வாலிபர் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். மணிமாலாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×