search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளிப்பாளையம் அருகே கூலி தொழிலாளி அடித்து கொலை
    X

    பள்ளிப்பாளையம் அருகே கூலி தொழிலாளி அடித்து கொலை

    பள்ளிப்பாளையம் அருகே முன்விரோத தகராறில் கூலி தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பள்ளிப்பாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் சரண்ராஜ் (வயது 35). கூலி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரமேஷுக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அவர்களுக்குள் நேற்று தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரமேஷ் கட்டையை எடுத்து சரண்ராஜ் தலையில் அடித்தார்.

    இதில் பலத்த காயம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்து ரமேஷ் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து சரண்ராஜ் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சரண்ராஜ் இன்று காலை பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

    இது குறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் சரண்ராஜை தாக்கிய ரமேஷை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    Next Story
    ×