என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னிமலை அருகே மேலும் ஒரு கிணற்றில் கொட்டப்பட்ட ஆலைக்கழிவுகள் அகற்றம்
Byமாலை மலர்19 Jun 2018 9:59 AM GMT (Updated: 19 Jun 2018 9:59 AM GMT)
சென்னிமலை அருகே கழிவுகளை கொட்டி மூடியதாக வந்த புகாரை அடுத்து மற்றொறு கிணற்றிலும் கொட்டப்பட்ட ஆலைக்கழிவுகள் அதிகாரிகள் மேற்பார்வையில் அப்புறப்படுத்தப்பட்டது.
சென்னிமலை:
சென்னிமலை அருகே உள்ள முகாசிபிடாரியூர் ஊராட்சி, செந்தாம் பாளையம் பகுதியில் கருப்பசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் பயன்படுத்தாத கிணறு ஒன்று இருந்தது.
இதில் கடந்த மே மாதம் சிப்காட் பகுதியில் இருந்து சாயக்கழிவுகளை கொண்டு வந்து கிணற்றில் கொட்டி மூடி விட்டனர், இதனால் அந்த பகுதி முழுவதும் மிகுந்த துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் குடிநீர் கெட்டுப்போகும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் புகார் கூறினர்.
அந்த கிணறுமுழுவதும் தோண்டி எடுக்கப்பட்டு கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டது. இதனையடுத்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் முன்னிலையில் 16 ம் தேதி பெருந்துறையில் நடந்த பேச்சு வார்த்தையில் மற்றொறு கிணறு செந்தாம் பாளையம் பகுதி தண்ணீர் பந்தல் தோட்டத்தில் பழனிசாமி என்பவருக்கு பாத்தியப்பட்ட கிணற்றில் கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளதாக புகார் தெரிவித்தனர்.
அதை தொடர்ந்து சம்பவ இடத்தினை ஆய்வு செய்த பெருந்துறை தாசில்தார் வீரலட்சுமி, டி.எஸ்.பி., ராஜகுமார், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் மோகனஜெயலட்சுமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், வருவாய் ஆய்வாளர் பெரியசாமி, கிராம நிர்வாக அலுவலர் சத்தியப் பிரியா ஆகியோர் நேரில் சென்று கிணறு மூடப்பட்ட பகுதியினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து சம்மந்தப்பட்ட நபர்களை வைத்தே கிணற்றில் கொட்டிய இரும்பு உருக்காலையில் வறுத்த மண் கழிவுகளை அப்புறப்படுத்தி வருகின்றனர். இதில் வேறு ஏதேனும் சாயக்கழிவு மூட்டைகள் உள்ளதா எனவும் அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர். கழிவு கொட்டிய இரண்டு கிணறுகளையும் தோண்டியதால் செந்தாம்பாளையம் பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.
இது சம்பந்தமாக கழிவுகளை அனுப்பிய ரங்கராஜ் ஸ்டீஸ் கம்பெனி, செந்தம்பாளையத்தினை சேர்ந்த மணி, கிழக்கு தோட்டம் புதூர் லோகநாதன், ஒரு லாரி உரிமையாளர் ஆகியோர் மீது சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னிமலை அருகே உள்ள முகாசிபிடாரியூர் ஊராட்சி, செந்தாம் பாளையம் பகுதியில் கருப்பசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் பயன்படுத்தாத கிணறு ஒன்று இருந்தது.
இதில் கடந்த மே மாதம் சிப்காட் பகுதியில் இருந்து சாயக்கழிவுகளை கொண்டு வந்து கிணற்றில் கொட்டி மூடி விட்டனர், இதனால் அந்த பகுதி முழுவதும் மிகுந்த துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் குடிநீர் கெட்டுப்போகும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் புகார் கூறினர்.
அந்த கிணறுமுழுவதும் தோண்டி எடுக்கப்பட்டு கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டது. இதனையடுத்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் முன்னிலையில் 16 ம் தேதி பெருந்துறையில் நடந்த பேச்சு வார்த்தையில் மற்றொறு கிணறு செந்தாம் பாளையம் பகுதி தண்ணீர் பந்தல் தோட்டத்தில் பழனிசாமி என்பவருக்கு பாத்தியப்பட்ட கிணற்றில் கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளதாக புகார் தெரிவித்தனர்.
அதை தொடர்ந்து சம்பவ இடத்தினை ஆய்வு செய்த பெருந்துறை தாசில்தார் வீரலட்சுமி, டி.எஸ்.பி., ராஜகுமார், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் மோகனஜெயலட்சுமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், வருவாய் ஆய்வாளர் பெரியசாமி, கிராம நிர்வாக அலுவலர் சத்தியப் பிரியா ஆகியோர் நேரில் சென்று கிணறு மூடப்பட்ட பகுதியினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து சம்மந்தப்பட்ட நபர்களை வைத்தே கிணற்றில் கொட்டிய இரும்பு உருக்காலையில் வறுத்த மண் கழிவுகளை அப்புறப்படுத்தி வருகின்றனர். இதில் வேறு ஏதேனும் சாயக்கழிவு மூட்டைகள் உள்ளதா எனவும் அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர். கழிவு கொட்டிய இரண்டு கிணறுகளையும் தோண்டியதால் செந்தாம்பாளையம் பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.
இது சம்பந்தமாக கழிவுகளை அனுப்பிய ரங்கராஜ் ஸ்டீஸ் கம்பெனி, செந்தம்பாளையத்தினை சேர்ந்த மணி, கிழக்கு தோட்டம் புதூர் லோகநாதன், ஒரு லாரி உரிமையாளர் ஆகியோர் மீது சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X