search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல் பங்க் ஊழியர் தீக்குளித்து தற்கொலை
    X

    பெட்ரோல் பங்க் ஊழியர் தீக்குளித்து தற்கொலை

    திருப்பத்தூர் அருகே பெட்ரோல் பங்க் ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தருமபுரி:

    திருப்பத்தூரை அடுத்த கவுதம்பேட்டையை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் சுதர்சன் (வயது 25). இவர் பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்து என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒன்றரை வயது மதிக்கத்தக்க மோனீஸ்வரன் என்ற ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

    சம்பவத்தன்று பெட்ரோல் பங்கில் வேலை பார்த்த சுதர்சன் வீட்டிற்கு செல்லாமல் அங்கேயே தங்கிவிட்டார். இதுகுறித்து அவரது மனைவி அவரிடம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால் மனம் உடைந்து காணப்பட்ட சுதர்சன் பெட்ரோல் பங்கில் உள்ள பைப்பை எடுத்து தனது உடலில் பெட்ரோல் ஊற்றி நடுரோட்டில் நின்று தீ வைத்து கொண்டார். அப்போது தீ உடல் முழுவதும் பரவியதால் வலியால் அவர் அலறி துடித்தார்.

    இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் சுதர்சனை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுதர்சன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×