search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    X

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    காவிரி நீர்பிடிப்பு மற்றும் கிருஷ்ணகிரி - கர்நாடக எல்லையில் பகுதியில் பெய்த மழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    ஒகேனக்கல்:

    ஒகேனக்கல்லுக்கு நேற்று 800 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று மாலை காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும், ஒகேனக்கல் அருகே உள்ள கிருஷ்ணகிரி - கர்நாடக எல்லையில் உள்ள பகுதிகளிலும் மழை பெய்ததால் நீர்வரத்து அதிகரித்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1700 கனஅடியாக அதிகரித்துள்ளது.

    தற்போது கோடை விடுமுறை என்பதால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்நு சுற்றுலா பயணிகள் இன்று ஒகேனக்கல் வந்திருந்தனர்.
    Next Story
    ×