search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின்உற்பத்தி பாதிப்பு
    X

    வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின்உற்பத்தி பாதிப்பு

    வடசென்னை அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் திடீரென பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த அலகில் உற்பத்தி செய்யபட்டு வந்த 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தபட்டுள்ளது.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அருகே உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் இரண்டு நிலைகளில் மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    முதல் நிலையில் உள்ள மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் வீதம் மொத்தம் 630 மெகாவாட்டும் இரண்டாம் நிலையில் இரண்டு நிலைகளில் தலா 600 மெகாவாட் வீதம் மொத்தம் 1200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் இரண்டாம் நிலை முதல் அலகில் கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த அலகில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

    தற்போது இரண்டு நிலைகளில் மொத்தம் 1230 மெகாவாட் மட்டும் உற்பத்தி நடைபெறுகிறது. மின் உற்பத்தி பாதிக்கப்பட்ட அலகில் கொதிகலன் குழாயை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×