search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    50 ஆண்டுகளுக்கு பிறகு அரசு கல்லூரி மாணவர்கள் சந்திப்பு
    X

    50 ஆண்டுகளுக்கு பிறகு அரசு கல்லூரி மாணவர்கள் சந்திப்பு

    ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் 1968-ம் ஆண்டு பி.யு.சி. பாடப் பிரிவு மற்றும் இளநிலை பாடப் பிரிவுகளில் பயின்ற மாணவர்கள் 50 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்தனர்.

    ராசிபுரம்:

    ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் 1968-ம் ஆண்டு பி.யு.சி. பாடப் பிரிவு மற்றும் இளநிலை பாடப் பிரிவுகளில் பயின்ற மாணவர்கள் 50 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்தனர். முன்னாள் மாணவர்கள் சார்பில் கட்டப்பட உள்ள பொன் விழா கட்டிடத்திற்கு நிதி உதவி செய்வது, வருகிற 27-ந் தேதி முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டத்தை நடத்துவது,

    இந்த கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக பணியாற்றி கவிஞர் மேத்தா, முன்னாள் மாணவரும், ஓய்வு பெற்ற கலெக்டருமான வி.கே.சண்முகம் உள்பட முக்கிய பிரமுகர்கள் இக்கல்லூரி தொடங்க உறுதுணையாக இருந்த குடும்பத்தினரை அழைத்து கவுரவிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

    இந்த கூட்டத்தில் கல்லூரி தொடங்கப்பட்ட 1968ல் முதல் மாணவராக சேர்ந்த பாலசுப்பிரமணியன், பாலகிருஷ்ணன், நடராஜன், பழனியப்பன், ரங்கசாமி, பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை முன்னாள் மாணவர் சங்க செயலாளர் முனைவர் சிவக்குமார் தொகுத்து வழங்கினார். முடிவில் முன்னாள் மாணவர்கள் சங்க பொருளாளர் முத்துக்குமார் நன்றி கூறினார்.

    Next Story
    ×