என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சிறுமி ஆசிபா கொலையை கண்டித்து அறந்தாங்கியில் த.மு.மு.க. வினர் ஆர்ப்பாட்டம்
அறந்தாங்கி:
காஷ்மீர் சிறுமி ஆசிபாவை படுகொலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அறந்தாங்கியில் புதுக்கோட்டை மாவட்டதமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு த.மு.மு.க மாவட்ட செயலாளர் கிரீன்முகமது தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் ஜெகதை செய்யது முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்ட த்தில் திருச்சி மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி துணைச் செயலாளர் ஹுமாயூன்கபீர் , மார்க்சிஸ்டு கம்யூ கட்சி மாவட்டச் செயலாளர் கவிவர்மன், இந்திய கம்யூ. மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் திருமாறன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் சிறுமி ஆசிபாவை பாலியல் பலாத் காரம் செய்து, படுகொலை செய்தவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கோட்டை அபுசாலிகு, நகரச் செயலாளர் பைசல், நகர துணைச் செயலாளர் முகமது ரபீக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்