என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஜெயலலிதா மரணம் - விசாரணை ஆணையத்தில் விவேக் ஜெயராமன் ஆஜர்
சென்னை:
முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்தபோது இருந்த அதிகாரிகள், டாக்டர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். தலைமை செயலாளர்கள், தனி செயலாளர். குடும்ப மருத்துவர் என இதுவரையில் 25 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொருவரிடமும் சிகிச்சையின்போது ஜெயலலிதாவை பார்த்தீர்களா? அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரம் என்ன? என்பது குறித்தும் மருத்துவமனையில் சேருவதற்கு முன்பு அவரது உடல்நிலை எவ்வாறு இருந்தது என்பது உள்ளிட்ட நீதிபதியின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர்.
சசிகலாவின் தம்பி மனைவி இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியாவிற்கு சம்மன் அனுப்பப்பட்டு அவரும் கடந்த மாதம் ஆணையத்தில் ஆஜரானார்.
இந்த நிலையில் இளவரசியின் மகனும் ஜெயா டி.வி.யின் சி.இ.ஓ.மான விவேக் ஜெயராமனை ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அவர் அதனை ஏற்று இன்று காலையில் நீதிபதி முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார்.
ஜெயலலிதா மரணம் அடைந்த போது விவேக் வெளிநாட்டில் இருந்தார். தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் அவர் சென்னை வந்தார். ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது போயஸ் கார்டனில் விவேக் இருந்தார். அதன் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. #JayalalithaDeath #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்