என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாப்பிரெட்டிப்பட்டி அருகே விவசாயி வீட்டில் 10 பவுன் நகை திருட்டு
Byமாலை மலர்27 April 2017 5:31 PM GMT (Updated: 27 April 2017 5:31 PM GMT)
விவசாயி வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகையை திருடிச்சென்றனர்.
பொம்மிடி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பறையப்பட்டிபுதூரை சேர்ந்தவர் லட்சுமணன்(வயது 72), விவசாயி. இவருடைய மனைவி பார்வதி(65). இவர்களுடைய 2 மகன்கள் வெளியூர்களில் வசிக்கிறார்கள். லட்சுமணன் தனது மனைவியுடன் பறையப்பட்டிபுதூரில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மஞ்சள் விற்பனையில் கிடைத்த ரூ.3 லட்சத்தை வீட்டில் உள்ள பீரோவில் லட்சுமணன் வைத்தார். நேற்று அதிகாலை வீட்டில் கணவன்-மனைவி தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் வெளிப்பக்க ஜன்னலை உடைத்து மர்மநபர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். பின்னர் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகையை திருடினார்கள்.
பீரோவில் ரூ.3 லட்சம் ஒரு துணியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததால் அது திருடர்களின் பார்வையில் சிக்காமல் தப்பியது. இதையடுத்து நகையுடன் திருடர்கள் அங்கிருந்து வெளியேறினார்கள். இந்த நிலையில் நேற்று காலை விழித்தெழுந்த லட்சுமணன் வீட்டில் உள்ள பீரோ திறந்து கிடப்பதையும் அதில் இருந்த 10 பவுன் நகை திருடு போயிருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். திருடப்பட்ட நகையின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். இதுதொடர்பாக ஏ.பள்ளிப்பட்டி போலீசாரிடம் லட்சுமணன் புகார் அளித்தார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் லட்சுமணனின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினார்கள். இந்த திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பறையப்பட்டிபுதூரை சேர்ந்தவர் லட்சுமணன்(வயது 72), விவசாயி. இவருடைய மனைவி பார்வதி(65). இவர்களுடைய 2 மகன்கள் வெளியூர்களில் வசிக்கிறார்கள். லட்சுமணன் தனது மனைவியுடன் பறையப்பட்டிபுதூரில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மஞ்சள் விற்பனையில் கிடைத்த ரூ.3 லட்சத்தை வீட்டில் உள்ள பீரோவில் லட்சுமணன் வைத்தார். நேற்று அதிகாலை வீட்டில் கணவன்-மனைவி தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் வெளிப்பக்க ஜன்னலை உடைத்து மர்மநபர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். பின்னர் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகையை திருடினார்கள்.
பீரோவில் ரூ.3 லட்சம் ஒரு துணியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததால் அது திருடர்களின் பார்வையில் சிக்காமல் தப்பியது. இதையடுத்து நகையுடன் திருடர்கள் அங்கிருந்து வெளியேறினார்கள். இந்த நிலையில் நேற்று காலை விழித்தெழுந்த லட்சுமணன் வீட்டில் உள்ள பீரோ திறந்து கிடப்பதையும் அதில் இருந்த 10 பவுன் நகை திருடு போயிருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். திருடப்பட்ட நகையின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். இதுதொடர்பாக ஏ.பள்ளிப்பட்டி போலீசாரிடம் லட்சுமணன் புகார் அளித்தார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் லட்சுமணனின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினார்கள். இந்த திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X