search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சட்டசபையை உடனே கூட்ட வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை
    X

    சட்டசபையை உடனே கூட்ட வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை

    தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகள் பற்றி விவாதிக்க சட்டசபையை உடனே கூட்ட வேண்டும் என காங்கிரஸ் கட்சித் தலைவர் ராமசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
    சென்னை:

    சென்னையில் தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ப.தனபாலை சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராமசாமி நேற்று சந்தித்து மனு கொடுத்தார்.

    பின்னர் நிருபர்களிடம் பேசிய ராமசாமி, “தமிழகத்தில் பல்வேறு பிரச்சினைகள் நிலவுகிறது. குடிநீர் பற்றாக்குறை, நீட் தேர்வு விவகாரம், விவசாயிகள் பிரச்சினை என்று பல பிரச்சினைகள் உள்ளன. மேலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு அரசுத் துறைகளுக்கான நிதியை ஒதுக்க வேண்டும். இதுபற்றி விவாதிப்பதற்காக சட்டமன்றத்தை உடனே கூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்” என்று அவர் குறிப்பிட்டார். 
    Next Story
    ×