என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வலங்கைமான் அருகே விவசாயி வெட்டிக் கொலை: 3 பேர் கைது
வலங்கைமான்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி ராஜேந்திர நல்லூரை சேர்ந்தவர் தட்சிணா மூர்த்தி (62). விவசாயி. இவர் தனது நண்பர் முருகதாசுடன் அருகில் உள்ள வயலுக்கு சென்றார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ரமணி, சங்கர், வாசு, மாங்காய் ரவி, அமுதா, அசோக் ஆகியோர் தட்சிணா மூர்த்தியை வழி மறித்து தகராறு செய்துள்ளனர்.
பின்னர் அவரை அரிவாளால் சரமாரி வெட்டினர். இதில் சம்பவ இடத்திலே தட்சிணா மூர்த்தி இறந்தார்.
இது குறித்து வலங்கைமான் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பெரியார், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.அப்போது பழிக்கு பழியாக இந்த கொலை நடைபெற்றது தெரியவந்தது. கொலையாளி ரமணியின் சகோதரர் ரமேசை கடந்த 2014-ம் ஆண்டு தட்சிணா மூர்த்தி சுளுக்கியால் குத்தி கொன்றுள்ளார்.அதற்கு பழி வாங்கவே தட்சிணா மூர்த்தியை வெட்டி கொன்றுள்ளனர். கொலையாளிகள் ரமணி, சங்கர், வாசு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மற்ற 3 பேரை தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்