என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
முழு அடைப்பு போராட்டத்தை வெற்றி பெற செய்யுங்கள்: காங்கிரஸ் வேண்டுகோள்
புதுச்சேரி:
மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விவசாயிகளின் நலன் காக்க அவர்களின் ஜீவா தார கோரிக்கைகள் நிறைவேற நாளை 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க. தலைமையேற்று நடத்தும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைத்து கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும், சமூகநல அமைப்புகளும், அனைத்து தொழிற்சங்கங்களும், வியாபார பெருமக்களும், பஸ் மற்றும் லாரி உரிமையாளர்களும், கல்வி நிறுவனங்களும், தனியார் தொழிற்சாலை ஊழியர்களும் ஆதரவு தெரிவித்து உணர்வு பூர்வமாக பங்கேற்று முழுஅடைப்பு போராட்டத்தை வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
காங்கிரஸ் பேரியக்கத்தின் நிர்வாகிகளும், தொண்டர்களும் அந்தந்த பகுதியில் உள்ள தி.மு.க. மற்றும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து, முழு அடைப்பு போராட்டத்தில் தவறாமல் பங்கேற்று விவசாயிகளின் கோரிக்கைகளை வென்றெடுக்க முழு மூச்சுடன் செயலாற்றுமாறு புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டு கொக்கிறேன்.
இவ்வாறு நமச்சிவாயம் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்