என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் 15 பவுன் நகையுடன் ஆசிரியர் பயிற்சி மாணவி மாயம்
Byமாலை மலர்19 April 2017 12:38 PM GMT (Updated: 19 April 2017 12:38 PM GMT)
15 பவுன் நகையுடன் ஆசிரியர் பயிற்சி மாணவி மாயமானார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மதுரை:
திருமங்கலம், சிந்துப்பட்டி அருகே உள்ள அழகுசிறையை சேர்ந்தவர் ஜெயக்கொடி. இவரது மகள் ஐஸ்வர்யா (வயது 22). இவர் மதுரை அருகே உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறிச் சென்ற ஐஸ்வர்யா பின்னர் வீடு திரும்பவில்லை. அப்போது வீட்டில் இருந்த 15 பவுன் நகைகள், கல்விச்சான்றிதழ் மற்றும் லேப்டாப்பை அவர் எடுத்துச் சென்றதாக தெரிகிறது.
இது குறித்து ஐஸ்வர்யாவின் தந்தை ஜெயக்கொடி சிந்துப்பட்டி போலீசில் புகார் செய்தார். விசாரணையில், பெரியவாகைக்குளத்தைச் சேர்ந்த பால்வேன் டிரைவர் அன்னகாமன் (24) என்பவருடன் ஐஸ்வர்யா சென்றிருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X