என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அண்ணா சாலை ஜெமினி மேம்பாலம் அருகே சாலையில் திடீர் விரிசல்
Byமாலை மலர்11 April 2017 5:10 AM GMT (Updated: 11 April 2017 5:10 AM GMT)
சென்னை அண்ணாசாலையில் உள்ள ஜெமினி மேம்பாலம் அருகே சாலையில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை அண்ணாசாலையில் உள்ள ஜெமினி மேம்பாலம் அருகே சாலையில் மீண்டும் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பள்ளம் ஏற்பட்ட பகுதிக்கு அருகே விரிசல் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜெமினி பாலம் அருகே ஆயிரம் விளக்கு பகுதியில் இந்த விரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னையின் முக்கிய சாலையான அண்ணாசாலையில் இந்த விரிசல் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜெமினி பாலத்தின் இரு திசைகளிலும் பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் நீண்ட தூரம் வரிசையில் காத்து கிடக்கின்றனர்.
விரிசல் ஏற்பட்ட பகுதிக்கு மெட்ரோ நிலைய அதிகாரிகள், காவல்துறையினர் உடனடியாக வந்தனர். இதனையடுத்து, விரிசலை சரிசெய்யும் பணியில் 10க்கும் மேற்பட்ட மெட்ரோ ரயில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அந்த வழியாக போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிசல் விரைவில் சரிசெய்யப்படும் என்று என மெட்ரோ நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. பொதுமக்கள் அதிகம் செல்லும் முக்கிய சாலையில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணாசாலையில் உள்ள ஜெமினி மேம்பாலம் அருகே சாலையில் மீண்டும் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பள்ளம் ஏற்பட்ட பகுதிக்கு அருகே விரிசல் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜெமினி பாலம் அருகே ஆயிரம் விளக்கு பகுதியில் இந்த விரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னையின் முக்கிய சாலையான அண்ணாசாலையில் இந்த விரிசல் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜெமினி பாலத்தின் இரு திசைகளிலும் பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் நீண்ட தூரம் வரிசையில் காத்து கிடக்கின்றனர்.
விரிசல் ஏற்பட்ட பகுதிக்கு மெட்ரோ நிலைய அதிகாரிகள், காவல்துறையினர் உடனடியாக வந்தனர். இதனையடுத்து, விரிசலை சரிசெய்யும் பணியில் 10க்கும் மேற்பட்ட மெட்ரோ ரயில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அந்த வழியாக போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிசல் விரைவில் சரிசெய்யப்படும் என்று என மெட்ரோ நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. பொதுமக்கள் அதிகம் செல்லும் முக்கிய சாலையில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X