என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாளையில் வணிக வளாக கட்டிடத்துக்கு சீல்: கலெக்டர் நடவடிக்கை
Byமாலை மலர்10 April 2017 10:57 AM GMT (Updated: 10 April 2017 10:57 AM GMT)
ஒப்புதல் பெறப்பட்ட கட்டிட அனுமதியை மீறி வேறுவடிவில் கட்டடம் கட்டியதால் பாளையில் உள்ள 6 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
நெல்லை:
பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் 6 மாடிகள் கொண்ட தனியார் வணிக வளாக கட்டிடம் உள்ளது. இதில் ஓட்டல், சூப்பர் மார்க்கெட், விடுதி அறைகள், கடைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன.
இந்தக்கட்டிடம் அனுமதி பெறப்பட்ட கட்டிட ஒப்புதலை மீறி கூடுதலாக வேறுவடிவில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரன், உள்ளூர் நகர திட்டமைப்பு குழுமத்துக்கு பரிந்துரை செய்தார். இது குறித்து உள்ளூர் நகர திட்டக்குழு உதவி இயக்குனர் வேல்முருகன் கட்டிட உரிமையாளருக்கு கூடுதல் கட்டிடத்தை அகற்ற நோட்டீஸ் வழங்கினார்.
ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் கூடுதல் கட்டிடத்தை அகற்றாததால், அந்த கட்டிடத்தை சீல் வைக்க கலெக்டர் கருணாகரன் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட கட்டிடத்துக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரன், உள்ளூர் நகர திட்ட குழும உதவி இயக்குனர் வேல்முருகன், பாளை தாசில்தார் தங்கராஜ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இன்று வந்தனர். கலெக்டர் மற்றும் அதிகாரிகளின் முன்னிலையில் 6 மாடிகள் கொண்ட கட்டிடத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
அப்போது கட்டிட உரிமையாளருக்கு ஆதரவாக பல வக்கீல்கள் வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் அதிகாரிகள் ஒவ்வொரு தளமாக சென்று அனைத்து அறைகளில் உள்ள நபர்களையும் வெளியேற்றி விட்டு அனைத்து அறைகளுக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது.
இதனால் அந்த கட்டிடத்தில் செயல்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் இன்று செயல்படவில்லை. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ‘சீல்’ வைக்கப்பட்ட கட்டிடத்தின் முன் போலீஸ் உதவி ஆணையர்கள் மாரிமுத்து, விஜயகுமார், இன்ஸ்பெக்டர் திருப்பதி தலைமையில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
இதுகுறித்து கலெக்டர் கருணாகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒப்புதல் பெறப்பட்ட கட்டிட அனுமதியை மீறி இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனால் இந்த கட்டிடத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. இதுபோல நெல்லையில் உள்ள பல கட்டிடங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அந்த கட்டிடங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் கருணாகரன் கூறினார்.
பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் 6 மாடிகள் கொண்ட தனியார் வணிக வளாக கட்டிடம் உள்ளது. இதில் ஓட்டல், சூப்பர் மார்க்கெட், விடுதி அறைகள், கடைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன.
இந்தக்கட்டிடம் அனுமதி பெறப்பட்ட கட்டிட ஒப்புதலை மீறி கூடுதலாக வேறுவடிவில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரன், உள்ளூர் நகர திட்டமைப்பு குழுமத்துக்கு பரிந்துரை செய்தார். இது குறித்து உள்ளூர் நகர திட்டக்குழு உதவி இயக்குனர் வேல்முருகன் கட்டிட உரிமையாளருக்கு கூடுதல் கட்டிடத்தை அகற்ற நோட்டீஸ் வழங்கினார்.
ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் கூடுதல் கட்டிடத்தை அகற்றாததால், அந்த கட்டிடத்தை சீல் வைக்க கலெக்டர் கருணாகரன் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட கட்டிடத்துக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரன், உள்ளூர் நகர திட்ட குழும உதவி இயக்குனர் வேல்முருகன், பாளை தாசில்தார் தங்கராஜ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இன்று வந்தனர். கலெக்டர் மற்றும் அதிகாரிகளின் முன்னிலையில் 6 மாடிகள் கொண்ட கட்டிடத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
அப்போது கட்டிட உரிமையாளருக்கு ஆதரவாக பல வக்கீல்கள் வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் அதிகாரிகள் ஒவ்வொரு தளமாக சென்று அனைத்து அறைகளில் உள்ள நபர்களையும் வெளியேற்றி விட்டு அனைத்து அறைகளுக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது.
இதனால் அந்த கட்டிடத்தில் செயல்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் இன்று செயல்படவில்லை. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ‘சீல்’ வைக்கப்பட்ட கட்டிடத்தின் முன் போலீஸ் உதவி ஆணையர்கள் மாரிமுத்து, விஜயகுமார், இன்ஸ்பெக்டர் திருப்பதி தலைமையில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
இதுகுறித்து கலெக்டர் கருணாகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒப்புதல் பெறப்பட்ட கட்டிட அனுமதியை மீறி இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனால் இந்த கட்டிடத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. இதுபோல நெல்லையில் உள்ள பல கட்டிடங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அந்த கட்டிடங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் கருணாகரன் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X