என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரியகுளம் அருகே பள்ளிக்கு சென்ற மாணவன் மாயம்
Byமாலை மலர்5 April 2017 11:13 AM GMT (Updated: 5 April 2017 11:13 AM GMT)
பெரியகுளம் அருகே பள்ளிக்கு சென்ற 9-ம் வகுப்பு மாணவன் மாயமானதைத் தொடர்ந்து போலீசார் அவனை தேடி வருகின்றனர்.
தேனி:
பெரியகுளம் தாலுகா ஜெயமங்கலம் அருகே உள்ள சங்கரமூர்த்திப்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் மாதவன் (வயது 15). அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவர் மாலையில் வீடு திரும்பவில்லை.
இது குறித்து பாண்டியன் பள்ளியில் சென்று கேட்ட போது மாதவன் இன்று பள்ளிக்கே வரவில்லை என்று கூறி விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பல இடங்களில் தேடிப் பார்த்தார். கிடைக்காததால் ஜெயமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் மாணவனை தேடி வருகின்றனர்.
தேவதானப்பட்டி அருகே உள்ள அட்டணம்பட்டி தண்ணீர் தொட்டி தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் அபி (17). 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று முருகன் தன் மனைவியுடன் போடி ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.
மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் இருந்த மகளை காணவில்லை. அக்கம் பக்கம் தேடியும் கிடைக்காததால் இது குறித்து தேவதானப்பட்டி போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
பெரியகுளம் தாலுகா ஜெயமங்கலம் அருகே உள்ள சங்கரமூர்த்திப்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் மாதவன் (வயது 15). அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவர் மாலையில் வீடு திரும்பவில்லை.
இது குறித்து பாண்டியன் பள்ளியில் சென்று கேட்ட போது மாதவன் இன்று பள்ளிக்கே வரவில்லை என்று கூறி விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பல இடங்களில் தேடிப் பார்த்தார். கிடைக்காததால் ஜெயமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் மாணவனை தேடி வருகின்றனர்.
தேவதானப்பட்டி அருகே உள்ள அட்டணம்பட்டி தண்ணீர் தொட்டி தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் அபி (17). 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று முருகன் தன் மனைவியுடன் போடி ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.
மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் இருந்த மகளை காணவில்லை. அக்கம் பக்கம் தேடியும் கிடைக்காததால் இது குறித்து தேவதானப்பட்டி போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X