என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீது நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை
Byமாலை மலர்29 March 2017 7:32 AM GMT (Updated: 29 March 2017 7:32 AM GMT)
10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி எச்சரிக்கை விடுத்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று வதந்தி பரவி உள்ளது. இதனால் வியாபாரிகள், பொது மக்கள் 10 ரூபாய் நாணயத்தை வாங்க தயங்குகிறார்கள். அனைத்து பத்து ரூபாய் நாணயங்களும் செல்லும் என்று ரிசர்வ் வங்கி பலமுறை தெளிவான அறிவிப்பு வெளியிட்டும் இன்னும் பல இடங்களில் அதனை வாங்க மறுத்து வருகிறார்கள். இதன் காரணமாக ரூ.10 நாணயங்களை சேமித்து வைத்திருப்பவர்கள் குழப்பம் அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ரிசர்வ் வங்கியின் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளவாறு திருவள்ளூர் மாவட்டத்தில் பத்து ரூபாய் நாணயங்களை வணிக நிறுவனங்கள், ஆட்டோ, பேருந்து, சந்தைகள் ஆகிய இடங்களில் பத்து ரூபாய் நாணயங்களை வாங்கி கொள்ள தடையேதுமில்லை. இதனை வாங்க மறுப்பவர்கள் தொடர்பான புகார்களை மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற எண் மூலமாக புகார்களை அளிக்கலாம். புகார் அளிப்பவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை விரைந்து மேற்கொள்ளப்படும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று வதந்தி பரவி உள்ளது. இதனால் வியாபாரிகள், பொது மக்கள் 10 ரூபாய் நாணயத்தை வாங்க தயங்குகிறார்கள். அனைத்து பத்து ரூபாய் நாணயங்களும் செல்லும் என்று ரிசர்வ் வங்கி பலமுறை தெளிவான அறிவிப்பு வெளியிட்டும் இன்னும் பல இடங்களில் அதனை வாங்க மறுத்து வருகிறார்கள். இதன் காரணமாக ரூ.10 நாணயங்களை சேமித்து வைத்திருப்பவர்கள் குழப்பம் அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ரிசர்வ் வங்கியின் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளவாறு திருவள்ளூர் மாவட்டத்தில் பத்து ரூபாய் நாணயங்களை வணிக நிறுவனங்கள், ஆட்டோ, பேருந்து, சந்தைகள் ஆகிய இடங்களில் பத்து ரூபாய் நாணயங்களை வாங்கி கொள்ள தடையேதுமில்லை. இதனை வாங்க மறுப்பவர்கள் தொடர்பான புகார்களை மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற எண் மூலமாக புகார்களை அளிக்கலாம். புகார் அளிப்பவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை விரைந்து மேற்கொள்ளப்படும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X