என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெள்ளிசந்தையில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை
Byமாலை மலர்28 March 2017 3:20 PM GMT (Updated: 28 March 2017 3:20 PM GMT)
வெள்ளிசந்தையில் வீட்டில் தனியாக இருந்த வாலிபர் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவில்:
வெள்ளிசந்தை அருகே வெள்ளமோடியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் பிரதீஷ், (வயது 23), கூலி தொழிலாளி.
பிரதீஷ் நேற்று வீட்டில் தனியாக இருந்தார். அப்போது திடீரென அவர் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர்கள் பிரதீஷை காப்பாற்ற முயன்றனர். ஆனால் தீயில் கருகிய பிரதீஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வெள்ளி சந்தை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணமாக கிடந்த பிரதீஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரதீஷ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில், பிரதீஷ் ஒரு தலை காதல் விவகாரத்தில் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஒரு தலைக்காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையில் பலியான பிரதீஷின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடக்கிறது. அவரது உறவினர்கள் ஏராளமானோர் ஆஸ்பத்திரியில் திரண்டிருந்தனர்.
வெள்ளிசந்தை அருகே வெள்ளமோடியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் பிரதீஷ், (வயது 23), கூலி தொழிலாளி.
பிரதீஷ் நேற்று வீட்டில் தனியாக இருந்தார். அப்போது திடீரென அவர் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர்கள் பிரதீஷை காப்பாற்ற முயன்றனர். ஆனால் தீயில் கருகிய பிரதீஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வெள்ளி சந்தை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணமாக கிடந்த பிரதீஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரதீஷ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில், பிரதீஷ் ஒரு தலை காதல் விவகாரத்தில் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஒரு தலைக்காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையில் பலியான பிரதீஷின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடக்கிறது. அவரது உறவினர்கள் ஏராளமானோர் ஆஸ்பத்திரியில் திரண்டிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X