search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யம் அருகே தொழிலாளி மீது தாக்குதல்
    X

    வேதாரண்யம் அருகே தொழிலாளி மீது தாக்குதல்

    வேதாரண்யம் அருகே தொழிலாளியை தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே உள்ள மூலக்கரை கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (40). கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் வீட்டிற்கு செங்கல் வாங்க சென்றார். அப்போது அவரை பெயர் சொல்லி அழைத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாலமுருகன், அவரது தம்பி குமரன் ஆகியோர் ஸ்குரு டிரைவரால் ரமேசை தாக்கினார்கள். படுகாயம் அடைந்த அவர் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் டி.எஸ்.பி. (பொறுப்பு) புகழேந்தி விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×