என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
புரட்சி தலைவியால் ஆதாயம் பெற்ற துரோகிகள் அ.தி.மு.க.வை அழிக்க பார்க்கிறார்கள்: டி.டி.வி.தினகரன்
சென்னை:
ஆர்.கே.நகர் ‘அ.இ.அ.தி.மு.க. அம்மா’ அணி வேட்பாளர் டி.டி.வி. தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் வீதி வீதியாக சென்று ஆதரவு திரட்டுகிறார்.
39-வது வார்டு புது வண்ணாரப்பேட்டை தேசிய நகர், இருசப்ப மேஸ்திரி தெரு, அசோக் நகர், செழியன் நகர் பகுதியில் நேற்று தொண்டர்களுடன் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
புரட்சி தலைவியால் ஆதாயம் பெற்ற துரோகிகள் அ.தி.மு.க.வை அழிக்க பார்க்கிறார்கள். நம்முடைய எதிரிகளுடன் சேர்ந்து கூட்டு சதியில் ஈடுபட்டு ‘அம்மா’ கட்டிக்காத்த கோடான கோடி தொண்டர்களின் உழைப்பில் வளர்ந்த இயக்கத்தை முடக்க முயற்சிக்கிறார்கள்.
அ.தி.மு.க.வை வீழ்த்த நினைப்பவர்களுக்கு தோல்வி தான் கிடைக்கும். அம்மாவின் ஆட்சி உண்மையுள்ள சட்டமன்ற உறுப்பினர்களால் காப்பாற்றப்பட்டு இன்று நடைப்பெற்றுக் கொண்டு இருக்கிறது. இந்த ஆட்சியின் திட்டங்கள் மேலும் 4 ஆண்டுகளுக்கு கிடைக்க இத்தொகுதியில் தொப்பி சின்னத்தில் என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார்.
பிரசாரத்தில் அமைச்சர் காமராஜ், எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட செயலாளர்கள் பி.வெற்றிவேல், பாலகங்கா, வெங்கடேஷ்பாபு எம்.பி. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்,
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்